இந்த பிறந்த நாள் (29.05.2012)
என் வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாத பிறந்த நாள். ஏன் என்றால், இதுபோல் இதுவரை எந்த ஒரு
வருடமும் கொண்டாடியதில்லை.
முதலில் என்னுடைய
இந்தப் புகைப்படத்தைப் பற்றி சொல்லி விடுகிறேன்.
இந்தப் புகைப்படம் 1983ம் ஆண்டு மயிலையில் உள்ள ஒரு ஸ்டூடியோவில்
எடுத்தது. மாப்பிள்ளை வீட்டுக்குக்
கொடுக்கத்தான் எடுத்தது. அப்புறம், இந்தப் புகைப் படத்தில் நான் கட்டியிருக்கும் இந்தப்
புடவை 1982ம் ஆண்டு பிறந்த நாளுக்காக என் சகோதரி திருமதி கீதா ஸ்ரீனிவாசன்
எடுத்துக் கொடுத்த புடவை. இது நல்ல நீல
நிறப் புடவை . இதில் உள்ள
சின்னச்சின்ன கட்டங்கள் வெள்ளை நிறம்.
பெரிய வட்டங்கள் உள்ளனவே அவை, சிகப்பு, ராமர் நீல நிறம், கிளிப்பச்சை
ஆகியவை. இந்தப் புடவை எனக்கு ரொம்ப
ரொம்பப் பிடிக்கும்.
சரி.
இந்த வருடப் பிறந்த நாளில் என்ன சிறப்பு?
இந்த
வருடம் நான் பிறந்த தேதியும், என் நட்சத்திரமும் ஒரே நாளில் வந்தது.
28.05.2012 இரவு
சரியாக 1200 மணிக்கு என்னை எழுப்பி வாழ்த்து சொன்னாள் என் மகள். அவள் வாழ்த்துதான் முதல் வாழ்த்து. அடுத்து என் கணவர் வாழ்த்தினார். (முதல் நாளே
என் கணவர் 2 புடவைகளைப் பரிசளித்து விட்டார்)
காலையில்
எழுந்ததும் எங்கள் சம்பந்தி வாழ்த்தினார். பிறகு குளித்து கோவிலுக்குச் சென்றால்
குருக்கள் மாமா வாழ்த்தினார். (இது
என்மகளின் ஏற்பாடு என்று பிறகு தான் தெரிய வந்தது). பிறகு அதிகாலையிலேயே அலுவலகத்திற்குச் சென்று
விட்ட என் மருமகள் தொலை பேசியில் வாழ்த்தினாள். (மகனும்,
மருமகளும் 2 நாட்களுக்கு முன்பே ஒரு புடவையை பரிசளித்து விட்டனர்).
அலுவலகத்துக்குச்
செல்ல வீட்டிலிருந்து கிளம்பிய போது என் நாத்தனார் எனக்கு திருமண நாளுக்கு
(01.05.2012) பரிசளித்த i-Pod ஐ என் மகள் கொடுத்தாள். அதில் ராம் படத்திலிருந்து
“ஆராரிராரோ
நான் இங்கு பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து
முதல் பாடலாகப் பதிந்து கொடுத்தாள். அத்துடன் அடுத்ததாக எனக்கு மிகவும் பிடித்த,
விநாயகர் அகவல்.
பரங்கிமலை ரயில் நிலையத்திற்குச் சென்ற போது ராகவ் (எங்கள்
குடும்ப நண்பர் திரு வெங்கட்ராமனின் மகன்) ஒரு பாக்கெட்டை பூக்காரம்மா மூலமாகக்
கொடுத்து வாழ்த்தினார். அந்தப்
பொட்டலத்தில் ஒரு முருகர் விக்கிரக கீ செயின், ஒரு பாக்கெட் மதுரை தாழம்பூ
குங்குமம், ஒரு முழம் மல்லிப்பூ, ஒரு காட்பரீஸ் சாக்லேட் இருந்தது.
ப்ளாட்பாரத்தில்
நுழைந்த போது என்னுடன் பணி புரியும் ஒரு தோழி ஒரு பாக்கெட்டைக் கொடுத்து
வாழ்த்தினாள். அது ஒரு TIMEX WATCH அதுவும் என் மகளின் பரிசு தான். இது எல்லாம் என்
மகளின் ஏற்பாடுதான் என்று பிறகு தெரிய வந்தது.
அலுவலகத்திற்குள்
நுழைந்து என் இடத்திற்கு வந்து அமர்ந்ததும் என் தோழி பூங்குழலி ஒரு அழகான படகு
வீடு புகைப் படம் பரிசளித்தாள். அது
பூங்குழலியின் மகன் எடுத்த படம். லாமினேட் செய்து கொடுத்திருந்தார். ரொம்ப அழகாக இருந்தது.
இத்துடன்
தொலைபேசியில் என் நாத்தனார், ஓரகத்தி இருவரும் வாழ்த்தினார்கள்.
முகப்
புத்தகத்தில் நுழைந்தால் கிட்டத் தட்ட 100 பேருக்கு மேல் வாழ்த்தி
இருக்கிறார்கள். வாழ்த்து மழையில் நனைந்து
திக்கு முக்காடிப் போனேன்.
மாலையில் வீட்டுக்குள் வந்ததும் கோவையிலிருந்து அம்மா, அப்பா, தம்பி, தம்பி மனைவி, தம்பி மகன் எல்லாரும் வாழ்த்தினார்கள்.
இரவு படுக்கப்
போகும் முன் என்மகள் ஒரு கவரை என் கையில் கொடுத்தாள். அதில் 2 குட்டி விசிறிகளும், 2 குட்டி
திண்டுகளும் இருந்தன. விசிறிகளை
பிள்ளையாரின் பின்னும், குட்டி திண்டுகளை குட்டிக் கிருஷ்ணனின் இரண்டு
பக்கங்களிலும் வைத்து விட்டேன்.
இப்படியாக பரிசு மழையிலும், வாழ்த்து மழையிலும் நனைந்து மனநிறைவுடன் தூங்கச் சென்றேன்.
இப்படியாக பரிசு மழையிலும், வாழ்த்து மழையிலும் நனைந்து மனநிறைவுடன் தூங்கச் சென்றேன்.
அத்துடன்
அன்று இரவே என் ப்ளாகைத் தொடங்கினேன்.